விதிமுறைகளை மீறி அதிக பாரங்களை ஏற்றி சென்ற லாரிகள் பறிமுதல்

பொள்ளாச்சி அருகே விதிமுறைகளை மீறி அதிக பாரங்களை ஏற்றி சென்ற 4 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழக -கேரள எல்லை பகுதியான பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் உள்ள கல் குவாரிகளில் இருந்து அதிக அளவில் கருங்கற்களை ஏற்றி கேரளாவிற்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி கிணத்துக்கடவு அடுத்துள்ள வீரப்பகவுண்டனூர் பகுதியில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அதிக அளவில் கருங்கற்கள் பாரம் ஏற்றி வந்த 4 லாரிகளை கிணத்துக்கடவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Exit mobile version