அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை: ரகசிய ஆவணங்கள் பறிமுதல்!

ஜோ பைடன் கடந்த 2009 முதல் 2016 வரை அமெரிக்காவின் துணை அதிபராக பதவி வகித்தார். இந்தநிலையில் சில முக்கிய ஆவணங்கள் ஜோ பைடன் வீட்டில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ அதிகாரிகள் சுமார் 13 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். அப்போது அவரது அறையில் ஏராளமான ரகசிய ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் இந்த ஆவணங்கள் 2009 -2016 காலகட்டத்தை சேர்ந்தவையா அல்லது தற்போதய ஆட்சியின் ரகசிய ஆவணங்களா என்பது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

Exit mobile version