இந்திய வம்சாவளி நடிகைக்கு “தேசிய மனித நேய விருது”…அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழங்கி கவுரவித்தார்!

இந்திய வம்சாவளி நடிகைக்கு தேசிய மனித நேய விருதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழங்கினார். அமெரிக்காவில் கலைத்துறையின் மூலம் மக்களிடம் மனித நேயத்தை ஊக்குவிக்கும் நபர்களுக்கு ‘தேசிய மனித நேய விருது’ என்ற உயரிய விருது அந்த நாட்டின் அதிபரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ‘தேசிய மனித நேய விருது’ வழங்கும் விழா வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. அப்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல டி.வி. நடிகை மிண்டி கலிங்குக்கு, இந்த உயரிய விருதை வழங்கி அதிபர் ஜோ பைடன் கவுரவித்தார்.

 

Exit mobile version