வடகொரியா 7வது அணுகுண்டு சோதனை நடத்த வாய்ப்பு..அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும்..!

வடகொரியா 7வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒராண்டுக்கும் மேலாக தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது, வடகொரியா 7வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான இறுதிகட்ட பணிகளை வடகொரியா மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்த அணுகுண்டு சோதனை நடத்தினால், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என நெட் பிரைஸ் எச்சரித்துள்ளார்.

 

Exit mobile version