இந்தியாவின் 105 பழங்கால கலைப் பொருட்களை ஒப்படைத்தது அமெரிக்கா!

இந்தியாவிடம் 105 பழங்கால கலைப் பொருட்களை அமெரிக்கா தற்போது ஒப்படைத்துள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகள் உள்ளிட்ட பழங்கால கலைப் பொருட்களை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசானது முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில்தான் தற்போது அமெரிக்காவானது 105 பழங்கால கலைப் பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. இந்தப் பொருட்கள் எல்லாம் நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஜித்சிங் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பாக ஜித்சிங் கூறியதாவது,

இந்திய மக்களை பொறுத்த வரை பழங்கால பொருட்கள் வெறும் கலை பகுதிகள் மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்க்கை பாரம்பரியம் மற்றும் பண்பாட்டின் ஒரு பகுதியாகும். கலைப் பொருட்களை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுத்த மான்ஹாட்டன் மாவட்ட நிர்வாகம், சிலை தடுப்புப் பிரிவு, உள்நட்டு பாதுகாப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பழங்காலப் பொருட்கள் விரைவில் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படும். இதில் கிழக்கு இந்தியாவில் இருந்து 47 கலைப் பொருட்கள், தென்னிந்தியாவில் இருந்து 27 பழங்கால பொருட்கள், மத்திய இந்தியாவில் இருந்து 22 கலைப் பொருட்கள், வட இந்தியாவில் இருந்து 6 பொருட்கள், மேற்கு இந்தியாவில் இருந்து 3 கலைப் பொருட்கள் அடங்கும் என்று ஜித்சிங் கூறினார்.

மீட்கப்பட்ட பழங்கால பொருட்கள் கி.பி. 2 முதல் 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலங்கட்டங்களை சேர்ந்தவை ஆகும். மேலும் கிபி 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலகட்டங்களை சேர்ந்தவையும் உள்ளன. டெரகோட்டா, கல், உலோகம், மரத்தால் செய்யப்பட்டவை. சுமார் 50 கலைப் பொருட்கள் இந்து, ஜெயின், முஸ்லீம் மதத்துடன் தொடர் புடவை என்றும், மீதம் உள்ளவை கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையிலானது எனவும் தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version