ஓசூர் சுற்றுப்பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழை:மக்கள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்றுப்பகுதிகளில் ஆலங்கட்டி மழையுடன் கனமழை பெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளான சூளகிரி,பேரிகை,அத்திமுகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. ஒருசில கிராம பகுதிகளில் ஆலங்கட்டியுடன், மழைக்கொட்டி தீர்த்தது. இந்தநிலையில் காலை நேரங்களில் வெயில் அதிகரித்தும், மாலை நேரங்களில் கனமழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் ஓசூர் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த கனமழையால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Exit mobile version