தஞ்சாவூரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. 

இந்த மழை, சம்பா சாகுபடிக்கு பயனுள்ளதாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏரி குளங்கள் முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளதால், நீர் நிரம்பி நிலத்தடி நீர் உயரும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Exit mobile version