கன்னியாகுமரியில் காதல் தோல்வி காரணமாக தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில், காதல் தோல்வி காரணமாக இளைஞர் ஒருவர், ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பரகுன்று புதுவல் கரைகாடு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் ஏற்கனவே 2 முறை ஒரு பெண்ணை காதலித்து தோல்வியுற்றதற்காக தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்நிலையில், குடிபோதையில் இருந்த அவர், குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில், ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டார். உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த முறை இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட போது, காதல் தோல்வியால் தற்கொலை செய்ய போவதாக தெரிவிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

Exit mobile version