கட்டுமானத் தொழிலதிபர் வீட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளை

மத்தியப் பிரதேசம் இந்தூரில் வீட்டுக் காவலாளியைத் துப்பாக்கி முனையில் மிரட்டிய கொள்ளையர்கள், கட்டுமானத் தொழிலதிபர் வீட்டில் இருந்து பணம் நகைகள் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர். 

இந்தூரின் லாசுதியா என்னுமிடத்தில் கட்டுமானத் தொழிலதிபரின் வீட்டுக்கு இரவில் சென்ற கொள்ளையர்கள் அந்த வீட்டில் உள்ளவர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டி நகைகள், பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இது குறித்துத் தொழிலதிபர் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சியைக் கொண்டு கொள்ளையர்களை அடையாளம் கண்டு தேடி வருகின்றனர்.

இரவில் வந்த கொள்ளையர்கள் 5 பேர், வீட்டு முற்றத்தில் காவலுக்கு இருந்த காவலாளியைத் துப்பாக்கியால் மிரட்டும் காட்சிப் பதிவு வெளியாகியுள்ளது.

Exit mobile version