சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற அரிய வகை பச்சை நிற சங்கு

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற பல லட்சம் ரூபாய் மதிப்புடைய அரிய வகை 180 பச்சை நிற சங்குகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு அரிய வகை பொருட்கள் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக சுங்கத்துறை பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த ஜமீல் உசேன், யூனுஸ், நூர் முகமது, அலாவுதீன், நாகூர்மிரான் உள்பட 6 பேரின் உடமைகளை சோதனை செய்தபோது, சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற அரிய வகையான பச்சை நிற சங்குகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 6 பேரிடம் இருந்து 180 பச்சை நிற சங்குகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version