பிரியாணி சாப்பிட அழைக்காத பாட்டியை கொன்ற பேரன்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பிரியாணி சாப்பிட அழைக்காத பாட்டியை கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி பெயர் ராஜேஸ்வரி. கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த10-ம் தேதி ராஜேஸ்வரி அவரது வீட்டில் பிரியாணி சமைத்துள்ளார். அன்று இரவு ராஜேஸ்வரியின் பேரன் 20 வயதான ராகேஷ் குடிபோதையில் ராஜேஸ்வரியின் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது ராஜேஸ்வரியின் மகள் வழி பேரன் மற்றும் பேத்திகள் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இதை கண்ட ராகேஷ் தன்னை ஏன் பிரியாணி சாப்பிட அழைக்கவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தாத்தா கண்ணனிடமும் பாட்டி ராஜேஸ்வரியிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராகேஷ், ஒருகட்டத்தில், பாட்டி ராஜேஸ்வரியை கடுமையாக தாக்கி, சாலைக்கு இழுத்து வந்து அவரை தள்ளி விட்டுள்ளார். இதில், ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாட்டியை கொன்ற பேரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரியாணி சாப்பிட அழைக்காத பாட்டியை பேரன் கொலை செய்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Exit mobile version