கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஆளுநர் இன்று பயணம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்றும், நாளையும் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

கஜா புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனைதொடர்ந்து, புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சேதத்தை மதிப்பிடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

 

Exit mobile version