சென்னை விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

ஹாங்காங்கிலிருந்து கடத்தி எடுத்து வரப்பட்ட 58 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் கேமரா உள்ளிட்ட பொருட்களை, சென்னை விமான நிலையத்தில் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஹாங்காங்கிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில், சென்னையை சேர்ந்த அசாருதீன், கவுதம் ஆகியோர், 22 லட்ச ரூபாய் மதிப்புள்ள 6 தங்க கட்டிகளை மறைத்து கடத்தி எடுத்து வந்தது தெரியவந்ததையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் அனுமதியின்றி கடத்தி எடுத்து வந்த கேமரா, லென்ஸ் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.

மலேசியாவியில் இருந்து வந்த கஞ்சி முகமது என்பவர், அனுமதியின்றி கடத்தி எடுத்து வந்த 9 லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி நோட்டுக்களையும் பறிமுதல் செய்தனர். இதே போன்று, நடந்த பல்வேறு சோதனைகளில், மொத்தமாக 58 லட்சத்திற்கான பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version