திருச்சி விமான பயணிகளிடம் அதிகாரிகள் நடத்திய சோதனையில் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் வந்தன. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் விமானத்தில் பயணம் செய்த ஞானசம்பந்தன், ஆரோக்கிய ராஜ், கணேசன், மாரியப்பன், யோகராஜ் ஆகியோரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் 249 கிராம் தங்கத்தை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 8 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் எனத் தெரிய வந்துள்ளது.  

Exit mobile version