எகிறி குதித்தேன் வானம் இடித்தது! ஆள விட்றா சாமி! திமுக மீட்டிங்கில் இருந்து சுவரேறி குதித்து ஓடிய உபிக்கள்!

விடியா திமுக சார்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிக் கூட்டத்தில் இருந்து திமுகவினர் சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்ற காட்சிகள் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

இப்படி தப்பியோடுவது ஏதோ திருட்டு கும்பல் அல்ல. திருச்சியில் நடைபெற்ற விடியா திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிக் கூட்டத்துக்கு வந்த உபிக்கள் தான்.

திருச்சியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தை கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர். கூட்டத்துக்கு ஆள் சேராததைக் கண்டு பிரியாணி போடுகிறோம் என ஆசை வார்த்தை கூறி உபிக்களை அழைத்து வந்துள்ளனர்.

பயிற்சி கூட்டம் எனக் கூட்டி வந்து, திராவிட மாடல் என்றால் என்ன, கலைஞர் சாதனைகள் என்றால் என்ன என ஸ்டாலின் ஆற்றிய உரையைக் கேட்டு அரண்டுபோன முகவர்கள் டயர்டாகி உட்கார்ந்திருந்தனர்.

இப்படியே விட்டால் கூட்டத்துக்கு வந்தவர்கள் மயக்கமடைந்து விடுவார்கள் என நினைத்து, மதிய உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது. உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது தான் தாமதம், ஆளைவிட்டால் போதும் என தப்பித்தோம், பிழைத்தோம் என தெறித்து ஓடியுள்ளனர் உபிக்கள்.

கூட்டத்தை விட்டு போகும்போது வந்த வரைக்கும் லாபம் என கூட்டத்திற்கான பந்தலில் கட்டியிருந்த வாழைத்தார், மேடையில் இருந்த அலங்கார பூக்கள் என ஒன்றைக் கூட விட்டு வைக்காமல் கபளீகரம் செய்து கிளம்பியுள்ளனர்.

மதிய உணவுக்குப் பிறகு கூட்டம் கலைவதைக் கண்டு கதிகலங்கிய அமைச்சர்கள் வெறும் சேர்களுக்கு எப்படி பயிற்சி கொடுப்பது என குழம்பியபடி மெயின் கேட்டை பூட்டியுள்ளனர்.

இருப்பினும் மனம் தளராத உடன்பிறப்புகள், பந்தலைப் பிரித்துக் கொண்டு தப்பித்து, சுவற்றில் ஏணி வைத்து ஏறி உயிரைக் காக்க ஓடியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

Exit mobile version