ஒன்றரை மாதத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,400 அதிகரிப்பு

கடந்த ஒன்றரை மாதத்தில் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 1,400 ரூபாய் அதிகரித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் நிலவும் நிர்வாக குழப்பம் மற்றும் இந்திய ரூபாய் வீழ்ச்சி காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இதனிடையே கடந்த ஜனவரி 1ஆம் தேதி சவரன் 24 ஆயிரத்து 168 ரூபாய்க்கு விற்பனையான தங்கம், தற்போது 25 ஆயிரத்து 568 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் ஒன்றரை மாதத்தில் ஆயிரத்து 400 ரூபாய் உயர்ந்திருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தநிலையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version