துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட தங்கம் !

துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர் அணிந்திருந்த ஷூக்களை சோதனை செய்தபோது, தங்க தகடுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 67 லட்ச ரூபாய் மதிப்பிலான ஒன்றே முக்கால் கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று துபாயிலிருந்து வந்த மற்றொரு விமானத்தில் இருந்த 2 பயணிகளை சோதனை செய்ததில் 28 லட்ச ரூபாய் மதிப்பிலான 560 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version