ஆந்திர வனப்பகுதியில் போலீசாரைத் தாக்க முயன்ற செம்மர கடத்தல் கும்பல் கைது

ஆந்திர வனப்பகுதியில் போலீசாரைத் தாக்க முயன்ற செம்மர கடத்தல் கும்பலை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் அருந்ததிவாடா அருகில் உள்ள வனப்பகுதியில் ரயில்வே காவல்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்கு செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் காவல்துறையினரை சுற்றி வளைத்து தாக்க முயன்றனர்.

உடனடியாக சுதாரித்த காவல்துறையினர் தாக்க முயற்சித்த 9 பேரைப் பிடித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய சிலரையும் தேடி வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 18 செம்மர கட்டைகள், கோடாலிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Exit mobile version