ஒருவாரத்திற்குள் முழுமையான மின்சாரம் வழங்கப்படும் -மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒருவாரத்தில் முழுமையான மின்சாரம் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின் இணைப்பு பணியில் ஈடுபட்டு மின்சாரம் தாக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வீரையன் என்பவரை மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயலால் பாதிக்கப்பட்ட நகரப்பகுதிகளில் 100 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டதாக கூறினார். கிராம பகுதியில் 50 சதவீதத்திற்கு மேல் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் தங்கமணி, ஒருவாரத்திற்குள் முழுமையான மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

 

Exit mobile version