ஆந்திராவில் தனிமாநில அந்தஸ்து கோரி முழு கடையடைப்பு போராட்டம்

ஆந்திராவில் நடைபெற்று வரும் முழுஅடைப்பு போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவிற்கு தனிமாநில அந்தஸ்து வழங்கக்கோரி ஆளும் கட்சி ஆதரவுடன் எதிர்கட்சிகள் இன்று பந்த் அறிவித்திருந்தன. அதனையொட்டி முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன. பேருந்துகளும் இயக்கப்படாததால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் நடத்தும் இந்த பந்திற்கு ஆளும் கட்சியான தெலுங்கு தேசமும் ஆதரவு தெரிவித்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version