ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து: 12 பேர் உயிரிழப்பு

ஆந்திரவில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், படகில் பயணம் செய்த 25 பேரை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். தேவிப்பட்டிணம் கிழக்கு கோதாவரி பகுதியில் 61 பேருடன் சென்று கொண்டிருந்த படகு ஒன்று, பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. இந்த தகவலறிந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், 24 பேரை பத்திரமாக மீட்டனர்.

படகில் பயணம் செய்த, மற்றவர்களை தேடும் பணி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version