ஆந்திராவுக்குள் தீவிரவாதிகள் நுழைய வாய்ப்பு; தீவிர கண்காணிப்பு

தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் திருப்பதி இடம் பெற்றுள்ளதாக உளவுத்துறை ஏற்கனவே ஆந்திர மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், இங்கிருந்து தீவிரவாதிகள் ஆந்திராவுக்கு தப்பி செல்ல கூடும் என்று கருதப்படுகிறது. இதனால், தமிழக எல்லையில் உள்ள சித்தூர் மாவட்டம் முழுவதும் ஆந்திர மாநில காவல் துறையினர் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

திருப்பதியில் உள்ள முக்கிய சந்திப்புகள், திருப்பதி மலை அடிவாரம் ஆகிய இடங்களிலும் வாகன சோதனையை ஆந்திர காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Exit mobile version