பிஞ்சு குழந்தைக்கு நரக வேதனை…!!

விழுப்புரம் அருகே பெற்ற குழந்தையை அடித்து சித்ரவதை செய்த கொடூர தாயிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கள்ளக்காதலனை சந்தோஷப்படுத்தவே பெற்ற குழந்தை என்றும் பாராமல் சித்ரவதை செய்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

பச்சை குழந்தை ஒன்று படுத்து அழுது கொண்டிருக்க வளையலை சரி செய்தபடி அதன் அருகில் அதன் தாய் அமர்கிறார் எனில் பார்ப்பவர்களுக்கு என்ன தோன்றும்..? பாலூட்ட எத்தனிக்கிறாள் என்று தானே. ஆனால் அதுதான் இல்லை. இங்கு மறைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் எவரையும் கதிகலங்க செய்பவை; எமனையும் குலை நடுங்க செய்பவை.

கைகளை கட்டிப் போட்டு வாயில் ரத்தம் வரும் வரை கொடூரமாக தாக்குவது எல்லாம் சைக்கோக்கள் கூட செய்யத் தயங்கும் காரியம். ஆனால் பொறுமையாக, போனில் ஆங்கிள் செட் செய்து, அதனை ரெக்கார்டு செய்து ரத்தம் வழிய வழிய அதனை போகஸ் செய்து ஆத்ம திருப்தி அடைவதெல்லாம் பிணந்தின்னிகளால் அன்றி பெண்ணால் அது சாத்தியமில்லை.

குழந்தையின் அபயக் குரலை வீடியோவில் கேட்கும் நமக்கே சமநிலை குலைகிறது. ஆனால் இந்த மிருகமோ தன் கைக்கே வலி எடுக்கும் அளவிற்கு அணு அணுவாய் அந்த குழந்தையை சிதைத்துள்ளது. தாயின் சித்திரவதை ஒரு கட்டத்தில் எல்லை மீறி செல்ல, குழந்தை சுய நினைவிழந்து மயக்கமானது. உறவினர்கள் கேட்டதற்கு வாசல் படியில் தடுக்கி விழுந்து வாயை உடைத்து கொண்டதாக கதை கட்டியுள்ளார் இரக்கமற்ற தாய்.

அதிச்சியை ஏற்படுத்திய இந்த வீடியோ வெளியான நிலையில், கொடூரத்தாய் துளசியை ஆந்திராவில் வைத்து கைது செய்தது தமிழக காவல்துறை. செஞ்சி அழைத்து வரப்பட்ட துளசியிடம் காவல்துறை நடத்திய விசாரணை வெளியான தகவல்கள் அனைத்தும் திடுக்கிட வைக்கின்றன. ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த துளசிக்கும், விழுப்புரத்தை சேர்ந்த வடிவழகன் என்பவரோடு திருமணம் நடந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கணவனோடு சென்னையில் தங்கி இருந்த துளசிக்கு, பிரேம் குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட, கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் சென்னையில் இருந்து வடிவழகன் சொந்த ஊரான விழுப்புரம் திருப்பியுள்ளார். சென்னையை விட்டு சென்றாலும் பிரேம் குமாருடனான கள்ளக்காதலை தொடர்ந்து இருக்கிறார் துளசி. ஒருகட்டத்தில் கணவனிடம் விவாகரத்து பெற்று தன்னுடன் வந்துவிடுமாறு பிரேம் குமார் வற்புறுத்தியுள்ளார்.

இதனால் கணவனுடன் வெறுப்பை வளர்க்க நினைத்த துளசி குழந்தையை அடித்து துன்புறுத்த தொடங்கியுள்ளார். இதனை வீடியோ எடுத்தும் கள்ளக்காதலன் பிரேம்குமாருக்கு அனுப்பி இருக்கிறார் துளசி. இந்த விஷயம் தெரிந்த பின் துளசியின் மொபைலை பிடுங்கி ஆய்வு செய்ய அதில் ஜீரணிக்க முடியாத பல கொடுமைகள் இருந்துள்ளன. அதிர்ச்சி அடைந்த அவர்கள், அவரை ஆந்திராவில் உள்ள அவரது தாய் விட்டிற்கு வழி அனுப்பி வைத்துள்ளனர். குழந்தை தற்போது அவரது தந்தை பராமரிப்பில் வளர்ந்து வருகிறது.

தற்போது குழந்தயை கொடுமை படுத்திய வீடியோ வெளியான நிலையில், சித்தூரில் தாய் வீட்டில் இருந்த துளசியை கைது செய்த போலீசார் அவரை செஞ்சி அழைத்து வந்து விசாரணை நடத்திய பின், நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைந்துள்ளனர். மேலும் கள்ளக்காதலன் பிரேம்குமாரை பிடிக்க, உதவி ஆய்வாளர் கார்த்தி தலைமையைல் 6 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

Exit mobile version