சிங்கப்பூரில் இருந்து மதுரை கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் பயணியின் கைப் பையில் மறைத்து வைக்கப்பட்ட 200 கிராம் எடை கொண்ட 4 தங்க வளையல்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

மத்திய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவர் உடமைகளை சோதனை செய்ததில், அவர் கைப்பையில் மறைத்து வைக்கப்படிருந்த 200 கிராம் எடையுள்ள 4 தங்க வளையல்களை கைப்பற்றினர். இதன் மதிப்பு 6 லட்சத்து 69 ஆயிரத்து 400 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இது குறித்து மீனாட்சி சுந்தரம் என்ற பயணியிடம் சுங்க இலாகா துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

Exit mobile version