வைக்கோல் கட்டில் துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வைக்கோல்போரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கிகள் மற்றும் வெடி மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பெரியேரிக்காடு கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தோட்டத்தில் இருந்த வைக்கோல் கட்டுகளில் ஆய்வு செய்த போது, இரண்டு நாட்டு துப்பாக்கிகள், 200 கிராம் கரி மருந்து மற்றும் 300 கிராம் பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய சுந்தர்ராஜனை தேடி வருகின்றனர்.

Exit mobile version