நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படம் திறப்பு

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முழுஉருவப்படம் நாடாளுமன்ற மைய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உருவப்படத்தை திறந்து வைத்தார்.

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய், கடந்த 1996, 1998-99 மற்றும் 1999-2004 ஆகிய ஆண்டுகளில் பிரதமராக பதவி வகித்தார். இவரது ஆட்சி காலங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அவை செயல்படுத்தப்பட்டன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உடல்நலக்குறைவால் அவர் காலமானார். இந்நிலையில், வாஜ்பாயை கவுரவிக்கும் விதமாக நாடாளுமன்ற வளாகத்தில் அவரது முழு உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். மேலும் காங்கிரஸ் எதிர்கட்சி உறுப்பினர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Exit mobile version