தீவிரவாத தாக்குதலில் பலியான வீரர்களுக்கு பைக் பேரணி நடத்தி அஞ்சலி

தீவிரவாத தாக்குதலில் பலியான வீரர்களுக்கு டெல்லியில் பைக் பேரணி நடத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக டெல்லியைச் சேர்ந்த மோட்டார் பைக் கிளப் சார்பில் உயர் ரக பைக் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் ஹார்லி டேவிட்சன், டுக்காட்டி, பிஎம்டபிள்யூ போன்ற உயர் ரக பைக்குகள் பங்கேற்றன. பேரணியின் இறுதியில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

Exit mobile version