அறிஞர் அண்ணா நினைவுநாள் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அஞ்சலி செலுத்தினார்!

கோவை அவினாசி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கழக தொண்டர்கள் பேரணியாக சென்று, அவினாசி சாலை சந்திப்பிலுள்ள பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஆகியோரின் திருஉருவ சிலைகளுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் எதிர்வரும் நாடாளுமன்ற தொகுதியில் 40 தொகுதிகளிலும் அதிமுக மாபெரும் வெற்றியை பெற அனைவரும் தீவிரமாக பாடுபடுவோம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Exit mobile version