மொழி போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு !

மதுரை மாநகர் மாவட்ட மாணவரணி சார்பில், மொழிபோர் தியாகிகளின் வீரவணக்க நாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து, மொழி போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறிய திமுக, தற்போது வரை எதுவும் செய்யவில்லை என்று கூறினார். அன்றைக்கு அனிதா மரணத்தில் அரசியல் பேசிய வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகள், தற்போது திமுக ஆட்சியில் உயிரிழந்த 12 மாணவர்களை பற்றி பேசியதுண்டா என குற்றஞ்சாட்டியுள்ளார்.

Exit mobile version