முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் சுஜித் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

குழந்தை சுஜித்தை இழந்து வாடும் கும்பத்தாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

திருச்சி மாவட்டம் நடுக்காட்டிப்பட்டியில் ஆரோக்கியராஜ்-கமலாமேரி தம்பதியின் 2 வயது குழந்தை கடந்த 25 ஆம் தேதி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. குழந்தையை மீட்க அதி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீட்கும் பணி நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற முயற்சி பயனளிக்காமல் சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். இந்தநிலையில், நடுக்காட்டுப்பட்டிக்கு சென்ற முதலமைச்சர் பழனிசாமி, குழந்தை சுஜித்தின் உருவப்படத்திற்கு மலர் மரியாதை செலுத்தினார். இதையடுத்து குழந்தையை இழந்து வாடும் பெற்றோரை சந்தித்த முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆறுதல் கூறினார்.

Exit mobile version