குன்னூரில் விடிய விடிய பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் திமுக செயலாளரின் சுயநலச் செயலே காட்டாற்று வெள்ளத்தில் மிகப்பெரிய பொருட்சேதம் ஏற்படக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குன்னூரில் விடிய விடிய பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு 14க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து சென்றது. மேலும், 5க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் திமுக மாவட்ட செயலாளர் முபாரக், தனது வீட்டிற்கு செல்வதற்காக பாலத்தின் உயரம் தாழ்வாக அமைத்ததாலேயே தற்போது பெரும் பொருட்சேதம் ஏற்பட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.திமுக செயலாளர் முபாரக்கின் சர்வாதிகார போக்கை கண்டித்து விரைவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version