கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

வெள்ளப் பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவில் 13-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது தொடர் விடுமுறை காரணமாக கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குவிந்து வரும் நிலையில், 13வது நாளாக தடை நீடிப்பதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

Exit mobile version