கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் அண்மையில் கொட்டித் தீர்த்த மழையால், அங்குள்ள நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தடுப்பு வெளியையும் தாண்டி ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர், படிகட்டு வரை கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version