பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ராமேஸ்வர மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 2 மாணவர்கள் உட்பட 19 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட 165 விசைப்படகுகளில் வெறும் 37 படகுகள் மட்டும் மீட்கப்பட்ட நிலையில் மீட்கப்பட முடியாத எஞ்சிய படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று இராமேஸ்வர மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை அரசால் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தால் 800 படகுகள் கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. சுமார் 2 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version