திருச்செந்தூர் அருகே வாழைத் தோட்டத்தில் பயங்கர தீ விபத்து

திருச்செந்தூர் அருகே வாழைத் தோட்டத்தில் தீ பிடித்ததில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழைகள் எரிந்து சேதமடைந்தன.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள தேரி குடியிருப்பு பகுதியில், வேல்குமார் என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டம் உள்ளது. அதன் அருகே செல்லும், உயர் அழுத்த மின்சார கம்பிகள் காற்றில் ஒன்றோடொன்று உரசிய போது, அருகில் இருந்த வேப்ப மரத்தில் தீப்பிடித்தது. இதனையடுத்து காற்றின் வேகத்தினால் தீ வாழை தோட்டத்திலும் பரவியது. அடுத்தடுத்து நான்கு தோட்டத்தில் பிடித்த தீயினால் சொட்டு நீர் பாசன உபகரணரங்களும் சேதமடைந்தன.

தகவல் அறிந்த திருச்செந்தூர் தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு வந்து, சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 ஆயிரம் வாழை மரங்கள், சொட்டு நீர் குழாய்கள் தீயில் கருகி சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version