பெண் காவலரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த சக காவலர்

கேரளாவில் பெண் காவலர் ஒருவரை, சக காவலர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம், வள்ளிகுன்னம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றியவர் சௌமியா புஷ்கரன். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். கணவர் அரபு நாட்டில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சௌமியா பணி முடித்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, சக போக்குவரத்து காவலரான அஜாஸ் என்பவர், காரில் சென்று சௌமியா வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியுள்ளார். இதில் நிலை தடுமாறி விழுந்த சௌமியாவை, அஜாஸ் அரிவாள் கொண்டு பலமுறை தாக்கியுள்ளார். இதில் சௌமியா ரத்த வெள்ளத்தில் பிணமானார். பின்னர், காரில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்த அவர் மீது ஊற்றி தீ வைத்தார்.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தவர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், அஜாஸை கைது செய்தனர். சௌமியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version