சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி ஆட்டத்தைக்காண சென்னையில் குவிந்த ரசிகர்கள்!

சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி ஆட்டத்தை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர்.
13வது ஐ.பி.எல் தொடர் வரும் 29ம் தேதி முதல் தொடங்குகிறது.ஐ.பி.எல் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொள்கிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான கேப்டன் தோனி, ரெய்னா, ராயுடு, சாவ்லா, ஹர்பஜன் ஆகியோர் சேப்பாக்கத்தில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். அப்போது, பாதுகாப்பை மீறி மைதானத்தில் நுழைந்த ரசிகர் ஒருவர் கேப்டன் தோனி காலில் விழுந்தார். இதனால் மைதானத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த ரசிகரை மைதான பாதுகாவலர்கள் தூக்கிச் சென்றனர்.

Exit mobile version