உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவு ஸ்டாலினின் நெற்றியில் அறைந்ததுபோல உள்ளது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!

திராவிட மாடல் என்பதற்கு தூய தமிழ் வார்த்தையை பயன்படுத்துமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது ஸ்டாலினை நெற்றியில் அறைந்தது போல உள்ளது என எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.YouTube video player

மதுரை காந்தி பொட்டல் பகுதியில் காந்தி சிலை முன்பாக உள்ள கொடி கம்பத்தில்
தேசியக் கொடியினை எதிர்க்கட்சித்துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழுக்காக உயிர் வாழ்கிறோம் தமிழைக் காப்பதற்காக இருக்கிறோம் என நாடகம் ஆடிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் அரசுக்கு, திராவிட மாடல் என்பதற்கு தூய தமிழ் வார்த்தையை பயன்படுத்துமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர்கள் கூறியது, ஸ்டாலினை நெற்றியில் அறைந்தது போல் உள்ளது என விமர்சித்தார்.

Exit mobile version