இன்றோடு முடிகிறது ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம்!

பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி இன்றோடு அனைத்துக் கட்சிகளின் பிரச்சாரமும் மாலை 5 மணியுடன் முடிகிறது. அதனால் இறுதி நாள் பிரச்சாரத்திற்கு அனைவரும் தயாராகி வருகிறார்கள். நண்பகல் இரண்டு மணியளவில் நமது கழகத்தின் இடைக்காலப் பொதுசெயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கழக வெற்றி வேட்பாளரான கே.எஸ்.தென்னரசு அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். நேற்றைய பிரச்சாரத்தில் மக்கள் அவருக்கு அமோக ஆதரவு அளித்திருந்தனர். தேர்தலில் அதிமுக வெல்லும் என்று கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன.

Exit mobile version