எக்குவடோரியல் கினி நாட்டில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மத்திய ஆப்ரிக்க நாடான எக்குவடோரியல் கினி நாட்டில், ராணுவ முகாமில் அடுத்தடுத்து வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
காயமடைந்த 400க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெடிவிபத்து நிகழ்ந்த பாட்டா பகுதியில், கிட்டத்தட்ட அனைத்து வீடுகளுமே சேதமடைந்துள்ளன. 4 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பொதுமக்கள் வெளியேறுமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்றும் அந்நாட்டு அரசு அச்சம் தெரிவித்துள்ளது.