இன்று எதிர்கட்சித் தலைவரின் தேர்தல் பிரச்சாரம்! – ஈரோடு அக்ரஹாரம் பகுதி, அசோகபுரம் பகுதி!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி அதிமுக சார்பாக வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசினை ஆதரித்து நேற்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து இன்றும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார். குறிப்பாக இன்றைக்கு அக்ரஹார பகுதியிலும் அசோகபுரம் பகுதியிலும் எதிர்கட்சித் தலைவர் பிரச்சாரம் செய்ய உள்ளார்கள்.

இன்றைக்கு தொடக்கமாக கனிராவுத்தர் குளம் பகுதியில் பிரச்சாரத்தினை தொடங்கி வண்டிப்பேட்டை, நெரிகல் மேடு, காவேரி ரோடு, கிருஷ்ணம்பாளையம், ராஜாஜிபுரம் பகுதியோடு இன்றைக்கான பிரச்சாரத்தை முடிக்கவுள்ளார். நேற்றைக்கு ஈரோடு மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பினை நல்கினர். இன்றும் அதுபோலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version