ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலானது பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக சார்பாக கே.எஸ். தென்னரசு அவர்கள் களமிறங்கியுள்ளார் அவரை ஆதரித்து கழகத்தின் இடைக்காலப் பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தினை மேற்கொண்டுவிட்டார். மக்கள் அலையலையாகத் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பினை அளித்து வருகிறார்கள். இன்று புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழாவினை சென்னையில் சிறப்பாக கொண்டாடிவிட்டு ஈரோடு கிழக்கிற்கு விரைந்துள்ளார் நமது கழக இடைக்காலப் பொதுச்செயலாளர் அவர்கள். அந்த அளவிற்கு சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். இந்தத் தேர்தலில் அதிமுக திமுவின் கூட்டணி கட்சியான காங்கிரஸினை வீழ்த்தி வெற்றிபெறும் என்று நம்பப்படுகிறது.
Discussion about this post