எதிர்கட்சித் தலைவர் பிரச்சாரம் – சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பகுதிகள் எங்கெங்கு?

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலினை முன்னிட்டு அதிமுக வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசினை ஆதரித்து கழக இடைக்கால பொதுசெயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று முதல் சூறாவளி பிரச்சாரம் செய்ய உள்ளார். அவர் இன்று புதன்கிழமை மாலை 5 மணியளவில் அவரது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். இன்றைக்கு முதலில் அவர் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட வீரப்பன் சத்திரம் பகுதி,பெரியார் நகர் பகுதி போன்றவற்றில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சூறாவளிப் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளக்கூடிய வழித்தடங்கள் பின்வருமாறு உள்ளன.

முதலில் வீரப்பன்பாளையத்தில் அவர் தனது பிரச்சார பேச்சினைத் தொடங்க உள்ளார். அங்கே உள்ள வெட்டுக்காட்டு வலசு, நாராயண வலசு, டவர் லைன் காலணி, சம்பத் நகர் ஆகிய பகுதியிலும், பின்னர் பெரிய வலசு நால்ரோடு பகுதியிலும், கல்யாண விநாயகர் கோவில் பகுதியிலும் பேச உள்ளார். பின்னர் பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் பேசிவிட்டு வீரப்பன்சத்திரம் பகுதியில் இன்றைக்கான பிரச்சார பேச்சினை முடிக்க உள்ளார்.

Exit mobile version