தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் இடைக்கால பொதுச்செயலாளர் ஆலோசனை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக தீவிர களப்பணி ஆற்றி வருகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன், கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை, சேலம் இல்லத்தில் நேரில் சந்தித்து, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் களப்பணியாற்றும் 187 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் பட்டியலை வழங்கினார். இதையடுத்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணி குழு உறுப்பினர்களுடன் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஈரோட்டில் ஆலோசனை மேற்கொண்டார். பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த விடியா திமுக அரசின் குறைகளை சுட்டிக்காட்டியும், அதிமுக கொண்டு வந்த நல்ல திட்டங்களை எடுத்துரைத்தும், மக்களிடம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

Exit mobile version