உயர்நீதிமன்ற தீர்ப்பின் வெற்றியை ’கேக்’ வெட்டிக் கொண்டாடிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி!

edappadi k palanisami

உயர்நீதிமன்ற தீர்ப்பில் கிடைத்த வெற்றியை அதிமுக தொண்டர்கள் கொண்டு வந்த கேக்கை வெட்டி, கழக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கொண்டாடினார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள கழகத்தின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி இல்லம் முன்பு தொண்டர்கள் உற்சாக முழக்கங்களுடன் தீர்ப்பின் வெற்றியைக் கொண்டாடினர். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்ட தொண்டர்கள், “ஒன்றரை கோடி தொண்டர்களின் வெற்றி” என்ற வாசகம் பதித்த கேக்குடன் வந்து வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து கேக்கை வெட்டிய கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, தொண்டர்களுக்கு அதனை அளித்து மகிழ்ச்சியடைந்தார்.

Exit mobile version