ஆசிரியர்கள் போராட்டத்தால் கல்வி பாதிப்பு: மாணவிகள்

ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருவதால் கல்வி பாதிக்கப்படுவதாக பள்ளி மாணவிகள் கவலை தெரிவித்துள்ளனர். விரைவில் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் 95 ஆசிரியர்களில் ஒருசிலர் மட்டுமே வகுப்புக்கு வந்துள்ளனர். ஆசிரியர்கள் வராததால் தேர்வுக்கு தயாராவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மாணவிகள் தெரிவித்தனர். பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை மாணவிகளே தீர்த்து கொள்ள முயன்று வருகின்றனர்.

Exit mobile version