அதிகாலை வீட்டு வாசலில் கோலமிட்ட பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

திருச்சி மணப்பாறை அருகே வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த பெண்ணை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 தீராம்பட்டியைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர், அதிகாலையில் அவரது வீட்டு வாசலில்   கோலம் இட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் சுப்புலட்சுமியின் பின்பக்கத் தலையில் இரும்புக் கம்பியால் அடித்து, அரிவாள் மற்றும் கத்தியைக் கொண்டு கை,கால்கள் மற்றும் முகங்களில் வெட்டியுள்ளனர். அப்போது, சுப்புலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் ஓடி வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். படுகாயமடைந்த சுப்புலட்சுமியை மீட்ட அவரது கணவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்

Exit mobile version