தேங்கி இருக்கும் மழை நீரால் நீதிமன்றத்திற்கு வருகை தருவோர் சிரமம்!

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இரண்டு மாதமாக தேங்கியுள்ள மழை நீரை அகற்றகூறியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நீதிமன்றத்திற்கு வருகை தரும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உடல் ஊனமுற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது மாநகராட்சி ஆணையர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Exit mobile version