கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்படுவது வழக்கம், இந்நிலையில் வார விடுமுறையான நேற்று தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா,கர்நாடகா,கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக வெள்ளி நீர் வீழ்ச்சி, மோயர் சதுக்கம், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் இயற்கை அழகினை ரசித்தவாறு சுற்றுலா பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும், நட்சத்திர ஏரியில் ஏராளமானோர் குடும்பத்தினருடன் படகு சவாரி மேற்கொண்டனர்.

Exit mobile version