கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்ததால் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையின் இருபுறங்களிலும் அணிவகுத்து ஊர்ந்த படி சென்றன. மேலும் விடுமுறை நாட்களில் ஏராளமானோர் வருவார்கள் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் காவலர்களை பணியமர்த்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Exit mobile version